Tuesday, August 11, 2015

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா.. இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயில் ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி ஆலங் கு ளம் பகு தி யி லி ருந்து இன்று முதல் சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
நெல்லை மாவட்டம் காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயி லில் ஆடி அமா வாசை திரு விழா கடந்த 6ம் தேதி கால் நாட்டு டன் தொடங் கி யது. இதை யொட்டி சுவா மிக்கு சிறப்பு பூஜை கள் நடந்து வரு கின் றன.
முக் கிய விழா வான ஆடி அமா வாசை வரும் 14ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. இதில் நெல்லை, தூத் துக் குடி மாவட்டத் தில் பல் வேறு இடங் களில் இருந்து ஏரா ள மான பக் தர் கள் கலந்து கொள் கின் ற னர். குறிப் பாக ஆலங் கு ளம் பகு தி யைச் சேர்ந்த பக் தர் கள் தங் கள் குடும் பத் து டன் ஒரு வாரத் திற்கு முன்பே வந்து விடு வார் கள்.
பக் தர் கள் வச திக் காக அரசு போக் கு வ ரத்து கழக பாப நா சம் பணி மனை சார் பில் இன்று (11ம் தேதி) முதல் ஆலங் கு ளத் தில் இருந்து பாப நா சத் திற்கு 25 சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. 13ம் தேதி 50க்கும் மேற் பட்ட பஸ் கள் பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வான 14ம் தேதி அன்று பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு 100க்கும் மேற் பட்ட அரசு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
குறிப் பாக நெல்லை மற் றும் தென் காசி பகு தி யில் இருந்து தலா 25 பஸ் களும், வி.கே.புரம், ஆலங் கு ளம் பகு தி யில் இருந்து தலா 20 பஸ் களும் பாப நா சத் துக்கு இயக் கப் பட உள் ளன. சுரண்டை மற் றும் அம் பை யில் இருந்து தலா 5 பஸ் கள், முக் கூ டல், சேரன் ம கா தேவி, கடை யம் பகு தி யில் இருந்து தலா 2 பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. ஆடி அமா வாசை நாளில் மொத் தம் 106 அரசு சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி வரும் 14ம் தேதி அன்று அம்பை டிஎஸ்பி சிவ நே சன், வி.கே.புரம் இன்ஸ் பெக் டர் மாட சாமி ஆகி யோர் தலை மை யில் 4 டிஎஸ் பி கள், 5 இன்ஸ் பெக் டர் மேற் பார் வை யில் 100க்கும் மேற் பட்ட போலீ சார் மற் றும் ஊர்க் கா வல் படை யி னர் பாது காப்பு பணி யில் ஈடு ப டு கின் ற னர்.

Sunday, August 9, 2015

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!


இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.
ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.
மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்
****************************************************************************

Miracles do happen in our daily life: - (ENGLISH VERSION)



On 8th. Aug. 2015 @ 6.30 am a uneducated single mother with her daughter were in Anna University Campus Chennai, looking for direction for Anna Arangam for her daughter counseling in B. Sc. Agriculture @ 8.30 am.

The mother a farmer tending cattle , and girl from a small village near Trichy due to some misguidance did not know that the counseling was in Agriculture University @ Coimbatore. Luck for the girl turned from some early morning walkers who informed her that she was to be in Coimbatore rather than Chennai.

The girl had scored 1017/ 1200 though suffering from illness during the +2 exams, somehow got misguided to attend interview at Chennai.

Thanks to the effort of one of the walkers who informed that he would sponsor to send both of them by flight immediately to Coimbatore. Other walkers pitched in friends/ contacts to inform the Registrar of the case. By 7.50 am it was agreed to look into the case. Meanwhile breakfast was provided to the mother and daughter .

The sponsor of the flight tickets transported them by @ 8.15 am to board the 10.05 am Coimbatore flight. Arrangement were made to pick them at Coimbatore airport @ 11.40 am by car. They reached the University counseling by 12.15 pm

The Registrar had made arrangement to ensure that the candidate got fair counseling. Through the counseling the candidate has been offered B.Sc. – bio technology in TNAU – Cbe. @ 2.00 pm the same day

Lets all believe that miracles do happen in our lives.

Share the info if you liked and spread the positive vibes

"மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு" தெருமுனைப் பிரச்சாரங்கள்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், பஜார் கிளையின் சார்பாக (08-08-15) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மணிக்கூண்டு, மெயின் பஜார், நியூபஜார் ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 இடங்களில் "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு" தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது.




Thanks : Kurichi Sulaiman

Saturday, August 8, 2015

அழகாகிக்கொண்டே வரும் கடையநல்லூர்...


கடையநல்லூர் மருத்துவமனை பேரூந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்த சமூகசேவகர் இயற்கை ஆர்வலர் காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு Samson Edward அவர்களையும் அந்தப்பணியினை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து முடித்த மாணவர்களையும் மனதார பாராட்டுகிறோம் மேலும் பேருந்து நிறுத்த கம்பங்களில் வண்ணம் பூச நடவடிக்கை எடுக்குமாறு கடையநல்லூர் நகராட்சிக்கு கோரிக்கையினை வைக்கிறோம்.



போட்டோ உதவி: Rajendra prasad & Manimaran

Friday, August 7, 2015

ஆகஸ்ட் 15 முதல் நமது புதிய வெப்சைட் தொடக்கம்..



கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முகநூல் பயணத்தில் (ilovekadayanallur) ஆரம்பித்த நமது பயணம் அதற்கடுத்து பிளாக்கர் எனப்படும் வலைப்பூவில் நமது செய்திகளைப் பகிர்ந்து வந்தோம்... அந்த வலைபூ நமது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று குறுகிய காலத்திலையே 10000 பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருகிருக்கிறது..

இதனிடையே பலர் நம் இன்பாக்ஸில் வந்து ஒரு வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தனர் அதில் முதலாவதாக  நமக்கு அந்த எண்ணத்தை ஓராண்டுகளுக்கு முன்பே சொன்னவர் S.P. துரை  அண்ணா அவர்கள் .. மேலும் பலரும் இதற்கு ஊக்கப் படுத்திக் கொண்டிருந்தனர் அவர்களைப் பற்றிய விரிவான பதிவுகள் விரைவில்,,

அனைவரின் வேண்டுகோளுகிணங்க "நெல்லை ஹெல்ப் லைன்" (www.nellaihelpline.comஅண்ணன் சக்திவேல் அவர்களின் உதவியோடு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி www.ourkadayanallur.in  என்னும் வெப்சைட் துவங்க உள்ளோம்.. உங்களின் பேராதரவு இதற்கு தேவை...

 இந்த தளம் பற்றிய உங்களது கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.. வேறு ஏதேனும் தகவல் மற்றும் கருத்துக்களுக்கு கீழ்காணும் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்...

நன்றி... நன்றி... நன்றி...

-ஐ லவ் கடையநல்லூர் & டீம் 

Contact US :


Facebook       :   www.fb.com/ilovekadayanallur
Twitter           :   www.twitter.com/ourkadayanallur
Google Plus   :    +ourkadayanallur
E-Mail id       :   ourkadayanallur@gmail.com
Blogger          :   www.ourkadayanallur.blogspot.com
Website          :   www.ourkadayanallur.in


கடையநல்லூர் உட்பட 12 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.8) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் 2ஆவது சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இம்மாதம் 8ஆம் தேதி 12 வட்டங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி வட்டத்தில் கோடகநல்லூர் கிராமத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் கீழ நத்தம், சங்கரன்கோவில் வட்டத்தில் தன்னூத்து, தென்காசி வட்டத்தில் திப்பணம்பட்டி, செங்கோட்டை வட்டத்தில் தெற்குமேடு, சிவகிரி வட்டத்தில் இடையன்குளம் கிராமத்திலும் குறைதீர் முகாம் நடைபெறும்.

வீ.கே. புதூர் வட்டத்தில் ரதமுடையார் கிராமத்திலும், ஆலங்குளம் வட்டத்தில் கரும்பனூத்து, அம்பாசமுத்திரம் வட்டத்தில் கோபாலசமுத்திரம், நான்குனேரி வட்டத்தில் படலையார்குளம், ராதாபுரம் வட்டத்தில் கோவலன்குளம், கடையநல்லூர் வட்டத்தில் கடையாலுருட்டி கிராமத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என்றார் அவர்.

Thursday, August 6, 2015

17,18,ஆகிய வார்டுகளில் செயல்படாத அடிபம்புகள்




17,18,ஆகிய வார்டுகளில் புதுர்&பெண்கள் பள்ளிக்கூடம் அருகே மாணவர்களுக்காக செயல் பட்ட அடிபம்புகள் செயல்படாமலும் குப்பை காடாக மாறி பலமாதங்கள் ஆகியும் சரிசெய்யப்பபட வில்லை பல முறை அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் கொடுத்தும் நாகராட்சி நிர்வாகம் கன்டுகொள்ள வில்லை...விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Thanks ; Kurichi Sulaiman